
இராசிபுரம்;செப்,4-
மங்களபுரத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் ஆனந்தாயி அம்மன் இரண்டாம் ஆண்டு தேர் திருவிழா நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்குட்பட்ட மங்கபுரம் பஞ்சாயத்து பகுதி உள்ளது. இங்குள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் ஆனந்தாயி அம்மன் கோவில் சுமார் 200 ஆண்டுகள் பிரசித்தி பெற்றது. இதனை அடுத்து வருடம் தோறும் இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த வருடம் கடந்த செவ்வாய் கிழமை பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று தேர் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் ஊர் கவுண்டர் ராஜா தவிர மிராசுதாரர்கள் என பொதுமக்கள் சுமார் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
