தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. பால் உற்பத்தி குறைவு மற்றும் கொள்முதல் விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் ஆரோக்கியா (ஹாட்சன்), திருமலா, சீனிவாசா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இந்த விலை உயர்வை அமல்படுத்தியுள்ளன. கோடைக் காலம் நெருங்கி வருவதால் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், வரும் நாட்களில் மேலும் விலை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவது சாமானிய மக்களைக் கவலையடையச் செய்துள்ளது.

