*இறந்தவர் குடும்பத்தாருக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன் :அல்லு அர்ஜுன்*

இடைக்கால ஜாமின் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 20 ஆண்டுகளாக எனது திரைப்படம் வெளியாகும்போது திரையரங்கிற்கு செல்வது வழக்கம். இம்முறை துரதிர்ஷ்டவசமாக விபத்து நடந்துவிட்டது. இறந்தவர் குடும்பத்தாருக்கு மீண்டும் ஒருமுறை இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன். என்னை நினைத்து கவலைப்பட ஒன்றுமில்லை நான் நன்றாக இருக்கிறேன்”என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =

You missed