*இதையும் கூடவா விட்டுவைக்கல: யானையை திருடி ரூ.27 லட்சத்துக்கு விற்ற கும்பல் | Stolen elephant, bought for Rs 40-Lakh in Jharkhand, and sold for Rs 27-Lakh in Bihar, Recovered*
ராஞ்சி:சாதாரணமாக ஒரு பொருளைத் திருடுபவர்கள் மறைத்து வைக்கக்கூடிய அளவிலேயே சிறிய பொருட்களை மட்டுமே திருடுவார்கள். ஆனால் தற்போது ஒட்டகம், பஸ் போன்ற உருவத்தில் பெரியவற்றையும் திருடிச் செல்கிறார்கள் பலே திருடர்கள்.இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில் மிகப் பெரிய யானையையே ஒரு கும்பல் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்தவர் நரேந்திர குமார் சுக்லா. இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து ஜெயமதி என்ற பெண் யானையை ரூ.40 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். அங்குள்ள பலாமு மாவட்டத்தின் சுகூரில் யானையுடன் அவர் தங்கி இருந்தார்.இந்நிலையில், அந்த யானை மாயமானது. இதுதொடர்பாக மேதினி நகர் போலீசில் நரேந்திர குமார் சுக்லா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, யானையை தேடி வந்தனர்.பீகார் மாநிலம் சப்ராவில் ஒரு கும்பல் பெண் யானை ஒன்றை ரூ.27 லட்சத்துக்கு விற்றதாக ஜார்க்கண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த போலீசார் அங்கிருந்த யானையை மீட்டனர். அதே நேரம் யானையை திருடி விற்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
காவல் துறை
சிறப்பு தொகுப்புகள்
சுற்றுலாத்தலங்கள்
தமிழக அரசு
தமிழகம்
நிகழ்வுகள்
புகைப்பட செய்திகள்
பொதுமக்கள் பிரச்சினை
முகப்பு பக்கம்
வனத்துறை
இதையும் கூடவா விட்டுவைக்கல: யானையை திருடி ரூ.27 லட்சத்துக்கு விற்ற கும்பல்
