*கவனக்குறைவே காரணம்!*

– *அரசு மீது அண்ணாலை குற்றச்சாட்டு*


“ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு…
‘எத்தனை பேர் வருவார்கள்’
என்பதை முறையாகக் கணக்கிட்டு…

அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும்,
கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும்
காவல்துறையின் பொறுப்பு.

திரு. விஜய் அவர்கள் கூட்டத்தில்,
*மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.*

இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும்,
காவல்துறையும் செயல்பட்டிருப்பது…
*கடும் கண்டனத்துக்குரியது.*

திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு,
அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு…

எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில்…
*போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது!*
வழக்கமாகியிருக்கிறது.

உடனடியாக,
‘உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’
என்றும்,
போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால்…
இந்த விபத்து நடந்ததா!
என்பது குறித்தும்,
மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி…

*கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்*
என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.”

– *அண்ணாமலை, பாஜக*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + fourteen =

You missed