விசாரணையில் அவர் ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தை சேர்ந்த அகமத் ஷேக் (55) என்பது தெரியவந்தது.
அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோயிலுக்குள் சென்ற இவர், சீதா ரசோய் பகுதியில் தொழுகை நடத்த தயாரானதாக சொல்லப்படுகிறது.
இதைக் கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி. போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அயோத்திக்கு அவர் ஏன் வந்தார்? அவர் மட்டுமே தனியாக வந்தாரா? அல்லது வேறு யாரேனும் வந்து இருக்கிறார்களா?” என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
அடுத்த வாரம் கொண்டாடப்பட இருக்கும் மகர சங்கராந்திக்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

