
மின்வாரிய மாயா பஜார்..
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கியமான 18 ஹார்டு டிஸ்குகள் மாயம்.
அத்தனையுமே மின்மாற்றிகள் ஊழல் தொடர்பான மிக மிக முக்கியமான டெண்டர்கள் மட்டும் கொள்முதல் சம்பந்தப்பட்டவை.
இந்த டிஸ்குகள் இருந்த அறைகளின் பகுதிகளில் கடந்த ஐந்தாண்டுகளாக சிசிடிவி கேமரா கிடையாது..
மிக முக்கியமான இந்தப் பகுதிகளில் தான் டெண்டர் தொடர்பான தரகர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
எனவே அந்தப் பகுதிகளில் கேமரா நிறுவ வேண்டும் என்று கண்காணிப்பாளர் சொன்ன போதெல்லாம், அதிகமாக செலவு பிடிக்கும் என்று சொல்லி சொல்லியே நிராகரித்து வந்துள்ளனர்.
போலீஸில் புகாராகி இப்போது விசாரணை ஆரம்பித்திருக்கிறது
