
*முறையான மருத்துவப் பட்டம் இன்றி சிகிச்சை: ஒருவர் கைது*
பழனி ராமர்கோவில் தெருவில் முறையான மருத்துவப் படிப்பு இன்றி கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்ததாக புகார் எழுந்தது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அமித்குமார் டிக்காதர் அலோபதி முறையில் சிகிச்சை அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் பழனி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிந்து அமித்குமார் டிக்காதரை கைது செய்தனர்.
