*வரலாற்றில் இன்று*
*02 ஜூலை 2026-ஞாயிறு*
*========================*
1790 : அமெரிக்காவில் முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது.
1798 : பிரெஞ்சுப் புரட்சிப் போர் :- நைல் நதிப் போரில் பிரிட்டிஷ் வெற்றி பெற்றது.
1830 : பிரான்ஸ் மன்னர் பத்தாம் சார்லஸ் முடிதுறந்தார்.
1858 : இந்தியாவின் நிர்வாகத்தை கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டது.
1870 : உலகின் முதலாவது சுரங்க ரயில் சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.
1914 : முதலாம் உலகப் போர் :- ஜெர்மனிப் படை லக்சம்பர்க்கை முற்றுகையிட்டன.
1916 : முதலாம் உலகப்போர் :- லியானார்டோ டாவின்சி என்ற இத்தாலி போர்க்கப்பல், ஆஸ்திரியாவினால் மூழ்கடிக்கப்பட்டது.
1918 : கனடா வரலாற்றில் முதல்முறையாக பொது வேலை நிறுத்தம் வான்கூவர் நகரில் நடைபெற்றது.
1922 : சீனாவைத் தாக்கிய சூறாவளியில் ஐம்பதாயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.
1934 : ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார்.
1937 : அமெரிக்காவில் கஞ்சா போதை மருந்தும், அதன் துணை விளைபொருட்களும் தடை செய்யப்பட்டன.
1943 : இரண்டாம் உலகப் போர் :- அமெரிக்கப் படகு ஒன்று ஜப்பான் கடற்படையினரின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது.
போலந்தில் ட்ரெப்ளிங்கா வதைமுகாமில் நாஜிக்களுக்கு எதிராக யூதர்களின் கிளர்ச்சி நடைபெற்றது.
இம்முகாமில் 18 மாதங்களில் 9 லட்சம் கைதிகள் கொல்லப்பட்டனர்.
1947 : புவெனஸ் ஐரிஸில் இருந்து சான் டியேகோ நோக்கிச் சென்ற விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
இதன் சிதைவுகள் 1998 ல் கண்டுபிடிக்கப்பட்டன.
1968 : பிலிப்பைன்ஸில் கசிகுரான் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 270 பேர் உயிரிழந்தனர்.
1973 : பிரிட்டன், மாண் தீவில் கேளிக்கை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர்.
1980 : இத்தாலியில் பொலோனா ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 85 பேர் உயிரிழந்தனர்.
200 பேர் காயமடைந்தனர்.
1985 : டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் டெக்சாஸ் மாநில பன்னாட்டு விமான நிலையத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 137 பேர் உயிரிழந்தனர்.
1988 : இந்திரா காந்தியை கொன்ற வழக்கில் கொலையாளிகளான சத்வத்சிங், கேஹர்சிங் இருவருக்கும் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
1989 : யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பேர் கொல்லப்பட்டனர் .
1990 : ஈராக், குவைத்தின் மீது படை எடுத்தது.
வளைகுடாப் போர் ஆரம்பமானது.
1999 : அசாம் மாநிலத்தில் ரயில் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 285 பேர் உயிரிழந்தனர்.
2006 : திருகோணமலை மாவட்டத்தில் மகிந்தபுர, கிளிவெட்டி, பாலதோப்பு, பச்சனூர், ராணுவ முகாம்களை தாக்கி மூதூர் ராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் விடுதலைப்புலிகள் நுழைந்தனர்.
2014 : சீனாவில் குன்சான் நகரில் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 146 பேர் உயிரிழந்தனர்.
114 பேர் காயமடைந்தனர்.

