*டிசம்பர் 22, 1921*
*சாந்திநிகேதன் கல்வி நிலையம் ஆரம்பமான நாள்.*
சாந்திநிகேதன் (Santiniketan) இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில், போல்பூர் எனுமிடத்தில், கொல்கத்தாவிலிருந்து வடமேற்கே 180 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது.
இவ்விடத்தில் ரவீந்திரநாத் தாகூர் 1862ம் ஆண்டில் புகழ்பெற்ற விஸ்வபாரதி பல்கலைக் கழக நகரை நிறுவினார். சாந்திநிகேதனில் அமைந்துள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகம் 1952ம் ஆண்டு முதல் இந்திய நடுவண் அரசின் கீழ் மத்தியப் பல்கலைக்கழகமாக செயல்படுகிறது.
சாந்தி என்ற சமஸ்கிருத சொல்லிற்கு அமைதி என்றும், நிகேதன் என்ற சொல்லிற்கு வீடு எனப் பொருள்படும். இரண்டு சொற்களை இணைத்து சாந்திநிகேதன் எனப் பெயரிடப்பட்டது.

