தூத்துக்குடியில் 159 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த டீக்கடைக்காரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் போலீசார் ரோந்து மணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பாளை., ரோடு எப்சிஐ குடோன் அருகில் ஒரு டீக்கடையில் சோதனையிட்டபோது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதுத தெரியவந்தது.
இது தொடர்பாக அந்த டீக்கடையை நடத்தி வரும், தூத்துக்குடி 3வது மைல் புதுக்குடியைச் சேர்ந்த செல்லசாமி மகன் செல்லப்பாண்டி (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 159 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், அதனை கொண்டு வந்த மாருதி கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

