
*🔥சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு.*
சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
செங்கமலப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்ததாக தகவல்.
பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மேலும் சிலர் சிக்கியுள்ளதாக அச்சம். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.
