
*ஜூன் 29,*
*தேசிய புள்ளியியல் தினம்*
( National statistics day
இந்தியப் புள்ளியியல் கழகத்தை (Indian Statistical Institute) நிறுவிய, “பத்மவிபூஷண்” Prasanta Chandra Mahalanobis பிறந்த தினமான இன்றைய தினத்தை தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடுகிறோம்.
புள்ளியியல் அல்லது புள்ளி விபரவியல் என்பது, விபரங்கள் தகவல்கள் சேகரிப்பு, ஒழுங்கமைப்பு, பகுப்பாய்வு, விளக்கம் என்பன குறித்த பாடத்துறை ஆகும்.
கள ஆய்வுகள், சோதனைகள் என்பவற்றின் வடிவமைப்புத் தொடர்பிலான தகவல் சேகரிப்புத் திட்டமிடல் உட்பட மேற்குறித்தவற்றில் எல்லா சிறப்புகளையும் இத்துறை கையாள்கிறது.
புள்ளியியலில் உரிய பயிற்சி பெற்று அத்துறைசார் பணிகளில் ஈடுபடுபவர் புள்ளியியலாளர் எனப்படுவார்.
புள்ளியியலாளர்கள், புள்ளியியல் பகுப்பாய்வின் வெற்றிகரமான பயன்பாட்டுக்குத் தேவையான வழி முறைகள் குறித்து நல்ல அறிவு பெற்றவராக இருப்பார். இத்தகையவர்கள், பொதுவாகப் புள்ளியியலின் பல்வேறுபட்ட துறைகளுள் ஏதாவது ஒன்றிலோ பலவற்றிலோ பணிபுரிந்து பட்டறிவு பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
